வவுனியாவில் கோவில் திருவிழாவில் 55000 ரூபாவிற்கு ஏலம் போன குழந்தை!!




இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள சிறப்புமிக்க ஆலயங்களில் வவுனியா சாஸ்திரிகூளாங்குளம், சின்னப்புதூர் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றி நாகதம்பிரான் ஆலயமும் ஒன்றாகும்.



இந்த ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, பார்ப்போரை வியப்பிலாழ்த்தும் வகையில் பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு நேர்த்திக்கடன் சம்பிரதாயம் இன்றும் பக்திப் பரவசத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.


ஆலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டியோ அல்லது தங்கள் பிள்ளைகளின் தீராத நோய்கள், தோஷங்கள், மற்றும் கண்டங்கள் நீங்க வேண்டும் என்று நாகதம்பிரானிடம் வேண்டிக்கொண்ட பெற்றோர், தங்களது குழந்தைகளை ஆலயத்தில் ஒப்படைக்கின்றனர்.


இவ்வாறு நேர்த்திக்கடன் வைக்கப்பட்ட குழந்தைகள், ஆலய நிர்வாகத்தினரால் இறைவனின் சந்நிதானத்தில் முறைப்படி ‘ஏலம்’ விடப்படுகின்றனர். அந்த வகையில், இம்முறை நடைபெற்ற திருவிழாவில் ஒரு குழந்தை ஐம்பத்தி ஐயாயிரம் (55,000) ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டமை பக்தர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



கருத்துரையிடுக

புதியது பழையவை